BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 20 September 2013

மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் காதலன் கைது

அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் காதலனை தற்கொலைக்கு தூண்டியதாக போலிசார் கைது செய்தனர்.


கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர் அஞ்சலி தாஸ் என்ற 26 வயதான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் புதன் கிழமை மாலை சென்னை, அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அஞ்சலி திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது அந்த பெண்ணுடன் புவனேஸ்வர் என்பவர் காதலித்துள்ளார், இருவரும் கணவன் மனைவி போல பழகியுள்ளார்கள். இந்த நிலையில் புவனேஷ்வருக்கு ஊரில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள் ஆனால், அஞ்சலி தனது காதலரை 2வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதை காதலர் ஏற்கவில்லை. தனக்கு திருமணம் நடந்தாலும் சென்னையில் நாம் ஒன்றாக முன்பு போலவே வாழ்வோம் என்று காதலர் கூறியதை ஏற்காத அஞ்சலி தற்கொலை செய்து கொண்டார், இதை அறிந்த காவல்துறையினர் காதலர் புவனேஷ்வர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்.

# கோடம்பாக்க சினிமாவுக்கு சூப்பர் ஸ்டோரி லைன் கிடைச்சிருக்கு


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media