BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 20 September 2013

ஆத்தீ! இன்னுமா இந்த அம்மாவுக்கு கோபம்? - கலக்கத்தில் வடிவேலு

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தென்னிந்திய திரை உலகம் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரை உலகை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். தமிழக முதல்வர் இதில் கலந்து கொள்ளுகிறார். 



அம்மாவின் ஆசி பெற, அம்மாவை வாழ்த்தி நாடகம் ஒன்று போட அனுமதி கேட்டு காத்திருந்தாராம் வைகைப்புயல் வடிவேலு. அது முதல்வர் ஜெயலலிதா காதுக்கு போனது. அவர் பார்த்த பார்வையில் விழா குழுவினர் மிரண்டு ஓடி வந்து விட்டனராம்.

விவேக் உங்களை வாழ்த்தி நாடகம் ஒன்று போட வேண்டுமென நினைக்கிறார் என்று முதல்வரிடம் அனுமதி கேட்கப்பட்டது. தாராளமா பண்ணட்டும் என்றாராம் முதல்வர்.

இன்னமுமா அம்மா நம்ம மேல கோபத்துல இருக்காங்க....என்று கலக்கத்தில் உள்ளாராம் வடிவேலு. 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media