திமுகவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கானா என திமுக தொண்டர்களால் அழைக்கப்படும் கருப்பசாமி பாண்டியன், இவர் சொந்த கட்சியான திமுகவைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் அதிரடி பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி புகார் அளித்திருந்தார், தமிழரசியின் இந்தப் புகாரினை பதிவு செய்த காவல்துறை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி பாண்டியனை தேடிவந்தனர்.
தலைமறைவான கருப்பசாமி பாண்டியன் மதுரை உயநீதிமன்ற கிளையில் முன் ஜாமின் மனுத்தாக்கல் செய்திருந்தார், இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில் தன்னையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என தமிழரசி கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழரசியை திங்கள் அன்று மனுதாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கருப்பசாமி பாண்டியனை திங்கள் அன்று வரை போலிஸ் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி கருப்பசாமி பாண்டியன் குடும்பத்தையும் போலிஸ் தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறினார்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.