BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 September 2013

செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.12 பவுன் செயினை ஆட்டைய போட்டதாக திருட்டு வழக்கு பதிவு

செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் 12 பவுன் செயினை ஆட்டைய போட்டதாக  திருட்டு வழக்கு பதிவு

செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. அனகை முருகேசன் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளரும் கூட.  அவருக்கும் தேமுதிக குரோம்பேட்டை நகரச் செயலாளர் கே.எம்.ஜெ. அசோக்கிற்கும் இடையே உட்கட்சி தகராறு நடந்துள்ளது. சென்ற  ஞாயிற்றுக்கிழமை இரவு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது முருகேசனுக்கும், அசோக்கிற்கும் இடையே தகராறு நடந்ததில் அசோக் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அசோக் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்றும் அந்த சங்கிலையை முருகேசன் எடுத்துக்கொண்டதாக கூறி போலிசில் புகார் அளிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிசார் அனகை முருகேசனை தேடிவருகின்றனர்.

# விரைவில் இந்த எம்.எல்.ஏவும் தொகுதி பிரச்சினைக்காக முதல்வரை சந்திக்கபோவாரோ?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media