BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 September 2013

சிரியாவை தாக்கவில்லை அமெரிக்கா மறுப்பு, சென்செக்ஸ் 700 புள்ளிகள் குறைந்தது, கம்யூனிஸ்ட்கள் அமெரிக்காவுக்கு கண்டனம்

சிரியா மீதான ஏவுகனை தாக்குதல் செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது, இந்திய சென்செக்ஸ் 700 புள்ளிகள் குறைந்தது.


சிரியா மீது ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக வெளியான செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது, ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியான உடனேயே இந்திய சென்செக்ஸ் 700 புள்ளிகள் குறைந்தது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 68 ரூபாயாக உயர்ந்தது.
-------
சிரியா மீது தாக்குதல் நடத்தாதே என்று கம்யூனிஸ்ட்கள் கண்டனம்

சிரியா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை நிலவுகிறது, அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த முனையும் அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலக்குழுக்கள் வன்மையாக கண்டிக்கின்றன என்று இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிஷ்ணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

# தினம் தினம் உங்க நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டு தள்ளுது, அவர்களை தாக்காதேன்னு ஒரு போராட்டம் நடத்த வழியில்லையாம், சிரியாவுக்கு போய்விட்டார்கள் இந்த கொம்யூனிஸ்ட்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media