கல்லூரிகளிலும் சில பள்ளிகளிலும் மட்டுமே இதுவரை இருந்துவந்த புதிய மாணவர்களை கிண்டல் செய்யும் ராகிங் கொடூரம் தற்போது பன்னாட்டு நிறுவனங்களிலும் அரங்கேற ஆரம்பித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிரனலி ரகானே (வயது 19) என்ற இளம்பெண் இரு நாட்களுக்கு முன் தன் கையை அறுத்துக்கொண்டது மட்டுமின்றி தூக்குப் போட்டுக் கொண்டார்.
உயிருக்குப் போராடிய அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் அடைந்திருந்த ரகானே, இன்று பரிதாபமாக இறந்தார். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலைக்கு காரணமான 10 பட்டதாரிகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.
சீனியர்களின் ராகிங் கொடுமையால் ரகானே தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் குறிப்பிட்ட 10 பட்டதாரி வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியது மற்றும் ராகிங் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிரனலி ரகானே (வயது 19) என்ற இளம்பெண் இரு நாட்களுக்கு முன் தன் கையை அறுத்துக்கொண்டது மட்டுமின்றி தூக்குப் போட்டுக் கொண்டார்.
உயிருக்குப் போராடிய அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் அடைந்திருந்த ரகானே, இன்று பரிதாபமாக இறந்தார். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலைக்கு காரணமான 10 பட்டதாரிகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.
சீனியர்களின் ராகிங் கொடுமையால் ரகானே தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் குறிப்பிட்ட 10 பட்டதாரி வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியது மற்றும் ராகிங் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.