BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 September 2013

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள் - தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றி

25 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இலங்கையின் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 28 இடங்களை வென்றுள்ளது.

ராஜபக்சேவுடன் கூட்டணியில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கூட்டணிக்கு 7 இடங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு 1 இடமும் கிடைத்துள்ளது.

வடமாகாணசபை தேர்தல் முடிவுகள் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 28 (நியமன இடங்கள் - 2)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

இலங்கையில் மாகாணங்களின் அதிகாரம் மிக குறைவேயாகும், இந்தியாவில் ஒரு முனிசிப்பால்டிக்குள்ள அதிகாரம் தான் இலங்கையில் மாகாண அரசுகளின் அதிகாரம், அனைத்து அதிகாரங்களும் இலங்கையில் மத்திய அரசிடமே குவிந்துள்ளது. மாகாணங்களுக்கு இந்திய மாநில அரசுகளுக்கு உள்ளது போல காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் கூட கிடையாது, எனவே இதனால் தமிழ்மக்களுக்கு எந்த விதமான அதிகாரமும் கிடைக்கப்போவதில்லை, என்றாலும் தமிழ் மக்கள் தங்கள் விருப்பத்தை உலகுக்கு தெரிவிக்க கிடைத்த ஒரு வாய்ப்பாகவே கருதலாம் என கருத்து தெரிவித்துள்ளார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media