BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 27 November 2013

கிரிமினல் வழக்கு, தனது வேட்பாளரை வாபஸ் பெற்ற கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்தியாவில் நடந்த அதிசயம்.

கிரிமினல் வழக்கு, தனது வேட்பாளரை வாபஸ் பெற்ற கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்தியாவில் நடந்த அதிசயம்.

ப்ரதிபால் சிங் சலூஜா என்ற தனது அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு அளித்த ஆதரவை அர்விந்த் கேஜ்ரிவாலின் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திரும்ப பெற்றது,
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு லக்னோ போலிசாரால் ஆகஸ்ட் 2013ல் பதியப்பட்டுள்ளது, இந்த விசாரணை குறித்து நீதிமன்றம் நவம்பர் 11ம் தேதி நோட்டிஸ் அனுப்பியுள்ளது, அது நவம்பர் 14 வரை வேட்பாளருக்கு கிடைக்கவில்லை, எனவே டெக்னிக்கலாக வேட்பாளர் மீது எந்த கிரிமினல் வழக்கும் நிலுவையில் இல்லை.

ஆனால் தாங்கள் அதிகாரத்தை கைப்பற்ற அரசியலுக்கு வரவில்லை, அரசியலை தூய்மை படுத்தவே தேர்தலில் போட்டியிடுகிறோம், எனவே வெளிப்படையான கட்சி, நிர்வாகம், அரசியல் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் ப்ரதிபால் சிங் சலூஜா என்ற தங்களது அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்ப பெறுகிறோம் என்றும் வேறு வேட்பாளரை நிறுத்த தேவையான காலம் கடந்து விட்டது என்றாலும் தாங்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாகவும்  கூறியுள்ளார்.

ப்ரதிபால் சிங் சலூஜா மீது நீதிமன்றத்தால் எந்த வழக்கும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் தூய்மையான அரசியலே முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

கற்பழிப்பு, கொலை, ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை கூட வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்தும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் இந்த நடவடிக்கை இந்தியாவில் தூய்மையான அரசியலுக்கு வழிவகுக்கும் நம்பிக்கையை ஊட்டுகிறது.

# அரசியலில் தூய்மைக்கு நம்பிக்கை ஊட்டும் இந்த  செய்தியை பகிருங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media