காஞ்சி சங்கரராமனை கொலை செய்தது காஞ்சி சங்கராச்சாரியார்கள் தான் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்று கூறிய புதுவை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இது குறித்து கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கரராமன் வரதராஜ பெருமாள் கோயில் மேனேஜராக இருந்து வந்தார். சங்கர மடத்தில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர்கள் செய்து வந்த தில்லு முல்லுகளை கண்டுபிடித்து அரசுக்கு கடிதம் அனுப்பிக் கொண்டே வந்தார். இதனால் ஜெயேந்திரர் தரப்புக்கும் சங்கரராமன் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சங்கரராமன் 2004ம் ஆண்டு வரதராஜ பெருமாள் கோயிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார், போலீஸ் அதிகாரிகள் நடத்திய நடத்திய தீவிர விசாரணையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் சுந்தரேச அய்யர், ரகு, கே.எஸ்.குமார், ரவுடி அப்பு உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கதிவரன் என்பவர் அண்மையில் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர்களுக்கு இருந்த பெண் தொடர்புகள் வெட்ட வெளிச்சமானது, எழுத்தாளர் அனுராதா ரமணன் சங்கராச்சாரி மீது வெளிப்படையாக செக்ஸ் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
தமிழகத்தில் நடைபெற்ற இந்த வழக்கை புதுச்சேரிக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தரப்பு வழக்கு போட்டது. இதனால் இந்த வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க முடியாது என்று விலகினார்.
காஞ்சி வரதராஜபெருமாள் கடவுள் சன்னிதியில் அவர் சாட்சியாக கொல்லப்பட்ட சங்கரராமன் கொலைக்கு நீதி கிடைக்காதா?
அனைவரும் விடுதலை என்றால் சங்கரராமனை கொன்றவர்கள் யார்? தன்னை தானே ஆள் வைத்து கொலை செய்து கொண்டாரா சங்கரராமன்?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.