BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 27 November 2013

சுப.உதயக்குமார் மீது போடப்பட்ட வெடிகுண்டு வழக்கு வாபஸ், குண்டுவெடிப்பு மணல் மாஃபியாக்களின் வேலை?

சுப.உதயக்குமார் மீது போடப்பட்ட  வெடிகுண்டு வழக்கு வாபஸ், இடிந்தகரையில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரே நாளில் நடந்த திருப்பம். மணல் மாஃபியாக்களின் வேலை?

நேற்று இரவு இடிந்தகரையில் சுனாமி காலணியில் ஒரு வீட்டில் நடந்த வெடிவிபத்தில் 6 பேர் பலியானார்கள், மேலும் பலர் காயமடைந்தனர், இந்த நிலையில் நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதாரி அந்த வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து பதுக்கி வைக்கப்பட்ட போது குண்டுகள் வெடித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார் மேலும் இதற்கு காரணமானவர் என்று கூறி அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயக்குமார் மீது வெடிகுண்டு வழக்கு எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சுப.உதயக்குமார் மீதான வெடிகுண்டு வழக்கு எஃப்.ஐ.ஆர் திரும்ப பெறப்பட்டது, இந்த வெடிகுண்டு தயாரித்ததாக வெடிகுண்டு வெடிப்பில் இறந்து போனவர் மற்றும் படுகாயம் அடைந்திருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, தற்போது இடிந்தகரையில் விசாரணை பொறுப்பை தூத்துக்குடி எஸ்.பி. எடுத்துள்ளார், நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரபிதாரியை சென்னைக்கு அழைத்துள்ளார் காவல்துறை தலைவர்.

இடிந்தகரையில் யாரும் வாசிக்காத பல வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அணு உலை போராட்ட எதிர்ப்பு குழுவினரின் பலத்த எதிர்ப்பாலும் போராட்டங்களாலும் இடிந்தகரை பகுதியில் போலிஸ் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை சாதகமாக பயன்படுத்தியுள்ள மணல் மாஃபியா கும்பல் வெடிகுண்டுகளை இடிந்தகரை பகுதியில் தயாரித்தும் பதுக்கி வைத்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தொடர்ந்து அணு உலை எதிர்ப்பு குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது, மேலும் அணு உலை எதிர்ப்புடன் தாது மணல் சுரண்டல் கும்பலையும் சுப.உதயக்குமார் தலைமையிலான போராட்ட குழு எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media