BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 11 November 2013

அதிமுக இணையதளத்தை முடக்கிய சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஈஸ்வரன் கைது

அதிமுகவின் இணையதளத்தை முடக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக பெங்களூரில் பணியாற்றி வரும் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் 2011ம் ஆண்டு பி.இ. முடித்துள்ளார், அதன் பின் பெங்களூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை செய்து வருகிறார், இவர்தான் அதிமுக இணையதளத்தை முடக்கியதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இவரை கைது செய்துள்ளார்கள்.

சென்னை அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media