BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 4 December 2013

கேரளாவில் ஐடி பெண்ணை ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழித்த இருவர் கைது



பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் 40 வயது பெண் தனது நிறுவன ஊழியர்களுடன் கேரளாவில் உள்ள ஸ்டார் ஓட்டலான பூவார் ஐலேண்ட் ரிசார்ட்(Poovar Island resort) இல் தங்கியிருந்தார், அப்போது இருவர் அவரை கற்பழித்துவிட்டார்கள், இது சக ஊழியர்களின் வேலையா அல்லது அங்கிருந்த ரிசார்ட் ஊழியர்களின் வேலையா என்று சந்தேகம் எழுந்தது.

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் 40 வயது பெண் தனது நிறுவன ஊழியர்களுடன் கேரளாவில் உள்ள ஸ்டார் ஓட்டலான பூவார் ஐலேண்ட் ரிசார்ட்(Poovar Island resort) இல் தங்கியிருந்தார், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு அவரது அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது, கதவை திறக்கும் முன்பு பால்கனி வழியாக இருவர் புகுந்து விட ஒருவன் அவரை தரையில் படுக்க வைத்து பிடித்துக்கொள்ள மற்றொருவன் கற்பழித்துள்ளான்.

இது குறித்து போலிசிடம் புகார் அளித்தார் அவர், இந்த ரிசார்ட்டுக்குள் வெளியாட்கள் நுழைய முடியாது, மேலும் இரவு 8 மணிக்கு மேல் படகு போக்குவரத்தும் இல்லை என்பதால் இதை ரிசார்ட் ஊழியர்களோ அல்லது அந்த பெண்ணின் நிறுவனத்தின் சக ஊழியர்களோ செய்திருக்க வேண்டும் என்று போலிஸ் கருதுகிறது. நான்கு நாட்களாக விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண் தனது ஸ்டேட்மெண்ட்டை பதிவு செய்துவிட்டு பெங்களூர் வந்துவிட்டார்

இது குறித்து கேரளாவின் பெண்கள் கமிஷனும் விசாரணை நடத்தி ரிசார்ட்டில் செக்யூரிட்டி பலவீனமாக உள்ளது என்றும் 15 ஏக்கர் ரிசார்ட்டுக்கு வெறும் 7 பாதுகாவலர்கள் தான் உள்ளனர் என்றும், கதவுகள் தாழ்பாள்கள் மிக எளிதாக உடைக்க முடியும் என்றும் விசாரணைக்கு பின் கூறியுள்ளார்கள்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தடயவியல் ஆதாரங்களை திரட்டி, ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்தபோது, அங்கு தங்கி இருந்த நபர்கள் மற்றும் அந்த விடுதி ஊழியர்களின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர். தற்போது அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் வீட்டு பொருட்கள் விறபனை செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளனர்.

அவர்கள் அந்த பெண் சாப்பிட சென்ற போது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் பின்புற கதவின் போல்டை கழட்டியுள்ளனர். பின்னர் அவர் தூங்கியதும் உள்ளே நுழைந்து கற்பழித்துள்ளனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media