BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 4 December 2013

நிஜமாகவே விடுதலையான காடுவெட்டி குரு, சட்டமன்ற விடுதிக்கு சென்றார்

நிஜமாகவே விடுதலையான காடுவெட்டி குரு, சட்டமன்ற விடுதிக்கு சென்றார்


4 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காடுவெட்டி குரு மீதான தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழான வழக்கில் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஏற்கனவே மூன்று முறை நீதிமன்றம் விடுவித்தும் அன்றே மீண்டும் மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் இம்முறையும் நீதிமன்றம் விடுவித்த பின் தமிழக அரசு மீண்டும் குருவை 5வது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தால் ஜெயலலிதா அரசு கைது செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது, ஆனால் இன்று மாலை சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவந்தார் காடுவெட்டி குரு.

காடுவெட்டி குருவை வரவேற்க டாக்டர் அன்புமணி மற்றும் பல ஆதரவாளர்கள் சிறைவாசலில் திரண்டிருந்தனர், விடுதலையாகி வெளிவந்த குரு சட்டமன்ற விடுதிக்கு சென்றுள்ளார், நாளை காலை தைலாபுரம் சென்று டாக்டர் ராமதாஸை சந்திக்க உள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media