BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 11 January 2014

17 லட்சங்களை வங்கி முன்பு கொளுத்திய சகோதரிகள்

பாகிஸ்தானில், 40 மற்றும் 35 வயதான இரு சகோதரிகள், மூன்று நாட்களுக்கு முன்பு, வங்கிக்கு சென்று, 17 லட்ச ரூபாய், பணத்தை தங்கள் அக்கவுண்ட்டில் இருந்து எடுக்க வந்திருப்பதாக கூறினர். உடனடியாக அத்தனை பெரிய தொகையை அளிக்க முடியாது என்று, கடந்த வியாழன் அன்று வருமாறு வங்கியின் மேனேஜர் கூறியுள்ளார்.

இதையடுத்து, வியாழன் அன்று வங்கிக்கு சென்ற சகோதரிகளிடம், 17 லட்ச ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்ட சகோதரிகள் இருவரும், அதை எடுத்து சென்று, வங்கியின் வாசலில், கொளுத்தி இருக்கின்றனர். இதை தடுக்க வந்தோரிடம், துப்பாக்கியை நீட்டி, "இது எங்கள் பணம், இதை நாங்கள் என்ன வேணும்னாலும் செய்வோம்." , என்று மிரட்டியுள்ளனர்.

அந்த சகோதரிகளுக்கும், அவர்களின் சகோதரர்கள் இருவருக்கும் மனநிலை சரியில்லை என அக்கம் பக்க்த்தில் உள்ளோர் தெரிவித்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media