அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே ஓடும், உலக புகழ் பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சி, அங்கு நிலவும் கடுங்குளிருக்கு, உறைந்து போய், பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது. அதை பார்த்து ரசிக்க, மற்றும் புகைப்படம் எடுக்க, , கடுங்குளிரையும் மற்றும் எந்த அபாயத்தையும் பொருட்படுத்தாமல், மக்கள் நயாகராவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கு முன்பு, 1912 ஆம் ஆண்டு இதே போல், நயாகரா உறைந்து காணப்பட்டது. நீர் வீழ்ச்சியின் கீழ், ஐஸ் கட்டிகள் விழுந்து, குவிந்து கிடக்கின்றது. நயாகரா உள்ள ஒரு பகுதியில், மைனஸ் 37 டிகிரி செல்ஷியஸ் குளிராக காணப்பட்டது.
இன்னும் சில நாட்களில் பனியும், குளிரும் குறையும் என்றும், இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.