BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 11 January 2014

குளறுபடியில் முடிந்த ஜனதா தர்பார் புதன்கிழமை தொடரலாம்

மக்கள் குறைகளை தீர்க்க, அவர்களை தன் அமைச்சர்களுடன் இன்று நேரில் சந்தித்தார், டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால். எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதை அடுத்து, கேஜ்ரிவால், நெரிசல் ஏதும் ஏற்படாமல் இருக்க, அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றார்.

இன்று புகார் கொடுக்க வந்தோரில், பெரும்பாலும், அரசு ஊழியர்களே அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று நடந்த குளறுபிடிக்காக வருத்தம் தெரிவித்த கேஜ்ரிவால், அடுத்த முறை இது போல் சம்பவங்கள் நடக்காமல், ஜனதா தர்பாரை சிறந்த நிர்வாகத்துடன் நடத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இன்று பாதியில் நிறுத்தப்பட்ட மக்களுடனான நேரடி சந்திப்பு, தேவையான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு முடிந்துவிட்டால், புதன்கிழமை தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media