BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 22 January 2014

காடுவெட்டி குரு மீது போலீசில் புகார்

புதுச்சேரியில் நேற்று வன்னியர் சங்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும் போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி,  பத்திரிக்கையில் பிரசுரிக்க முடியாத, அவதூறான வார்த்தைகளை பேசியிருக்கிறார். மேலும், ஜாதி வெறியை தூண்டும் வகையிலும் பேசியிருக்கிறார் என புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் டி.ஜி.பி. காமராஜை சந்தித்து காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. மீது புகார் மனு கொடுத்தனர்.

மேலும், அரசியலமைப்பு சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைப் பற்றியும், அச்சட்டத்தின் மூலம் பயன் பெறுகிற தாழ்த்தப்பட்ட மக்களை பற்றியும், இழிவுப்படுத்தும் வகையில் குரு பேசியிருப்பதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், காடுவெட்டி குரு மீதும், அக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தலைமை ஏற்றவர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கேட்டு கொண்டுள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media