BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 22 January 2014

தர்ணாவில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியினர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு


விதிக்கப்பட்ட 144 தடையை மீறி, இரண்டு நாட்கள் தர்ணாவில் ஈடுப்பட்டதற்காகவும், வன்முறையை தூண்டியதற்காகவும்,  டெல்லி போலீசார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சில பேரின் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.  டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

தன்னை தானே அராஜகவாதி என்று அழைத்து கொள்ளும் கேஜ்ரிவால் மீது, தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று கிரண் பேடி கூறியுள்ளார்.

இரண்டு நாட்களாக நடந்த தர்ணாவில், போலீசாருக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதை பற்றி டெல்லி பா.ஜ.க தலைவர் விஜய் பேசுகையில், "ஆம் ஆத்மியின் இந்த இரு நாள் அரசியல் நாடகம், இரண்டே இரண்டு போலீசாரை விடுமுறையில் அனுப்புவதற்காக தானா?!" என்று கேட்டுள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media