BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 22 January 2014

மணி சங்கர் அய்யர் கருத்துடன் உடன் பாடில்லை- டிக்விஜயா சிங்

"மோடி, இந்த 21ஆம் நூற்றாண்டில் பிரதமர் ஆகப்போவதில்லை. காங்கிரஸ் கூட்டத்தில், வேண்டுமென்றால் தேநீர் விற்கட்டும்", என்று கூறிய மணி சங்கர் அய்யர் கருத்துக்கு, பா.ஜ.க வில் இருந்து மட்டும் கண்டனங்கள் வரவில்லை. காங்கிரஸிலேயே கூட எதிர்ப்புகள் வந்திருக்கிறது. இதை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் டிக்விஜயா சிங் பேசுகையில், மணி சங்கரின், "மோடி டீ விற்கட்டும்" என்ற கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார்.

"இந்தியா ஜனநாயக நாடு.  எந்த ஒரு சாதாரணா குடிமகனும், நாட்டின் உயரிய பதவியை அடைய எண்ணலாம். எந்த ஒரு பின்புலம் இல்லாமல், நாட்டின் குடியரசு தலைவராக வந்தவர்கள் இந்நாட்டில் இருக்கின்றார்கள். அதனால், மணி சங்கர் அய்யர், மோடியை பற்றி கூறியது தவறு." என்று டிக்விஜயா சிங் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media