BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 22 January 2014

கேரளா நர்சுகளை பற்றி பேசி, சர்ச்சையில் சிக்கிய AAP குமார் விஷ்வாஸ்

6 ஆண்டுகளுக்கு முன் கேரளா நர்சுகளை பற்றி ஆம் ஆத்மி கட்சி குமார் விஷ்வாஸ் பேசியதை பிரச்சினையாக்கும் காங்கிரஸ்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான குமார் விஷ்வாஸ் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

முன்பு இஸ்லாமியர்கள் கொண்டாடும் முகரம் பண்டிகையை பற்றி கிண்டலடித்து, ஏற்கனவே சர்ச்சையில் சிக்கினார் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஷ்வாஸ்.

இவர் 6 ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டத்தில் கேரளாவில் உள்ள நர்சுகளை பற்றி அவர்களது நிறம் பற்றி கிண்டலாக பேசியிருந்த வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியது, இது கேரள மக்களை கடும் கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது. "முன்பெல்லாம் நர்சுகள் என்றாலே ஆண்களுக்கு உற்சாகமாக‌ இருந்தது. கேரள நர்சுகள் கருப்பானவர்கள். இதனால் அவர்களை சிஸ்டர் என்று கூப்பிட்டனர். இந்தப் பெண்களில் பலர் தங்களது பேஸ்புக்கில் படங்களைக் கூட போட மாட்டார்கள். ஆனால் இப்போது வட இந்திய நர்சுகள் வந்து விட்டனர். அவர்கள் கவர்ச்சிகரமாக இருக்கிறார்கள்", என்று ஆறு ஆண்டுகளுக்கு முன் பேசியுள்ளார் விஷ்வாஸ்.

விஷ்வாசின் இந்த பேச்சிற்கு, பல கண்டனங்கள் வந்துள்ளது. கொச்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

கேரளாவில் உள்ள நர்சுகளுக்கான சங்கங்கள் விஷ்வாஸை கண்டித்துள்ளனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் கிண்டலாக பேசியதை பிரச்சினையாக்குவது ஆம் ஆத்மி கட்சியை பழிவாங்கும் செயல் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

# 6 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை தற்போது கிளப்பி விட்டு பிரச்சினை செய்வது ராகுலுக்கு எதிராக போட்டியிடப்போகும் குமார் விஷ்வாசை பழிவாங்கும் செயல் என நினைப்பவர்கள் லைக் போடவும்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media