டெல்லியில்
வெற்றி பெற்றது முதல் அதிரடியாக செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி கட்சி,
வி.ஐ.பி கலாச்சராத்திற்கு முற்றிலும் எதிராக செயல்பட்டு வருகிறது.
கட்சியில் பெரிய பொறுப்பு அல்லது பதவி வகிக்கும், அரசியல் தலைவர்களின்
வாகனங்களில் பொறுத்தபடும் சிகப்பு விளக்குகளின் முறையை கைவிட்டுள்ளது.
"இது (வாகனங்களில் சிகப்பு விளக்கு பொறுத்துவது) ஆங்கிலேயர்கள் விட்டு
சென்ற மரபு, அவர்கள் வெளியேறி விட்டார்கள்; இந்த மரபு ஒட்டி கொண்டது."
என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தனக்காக நியமிக்கபட்டு
இருக்கும், காவல் அதிகாரிகளிடமும் தன் பாதுகாப்பு பற்றி பெரிதாக கவலை பட
வேண்டாமென கூறிய கெஜ்ரிவால், தன் ஆயுள் ரேகை நீளமாக இருப்பதாகவும், அதனால்
ஆயுள் கெட்டி எனவும், தனக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடாது எனவும் பதில்
அளித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.