BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 5 January 2014

திமுகவில் வலுக்கிறது அண்ணன் தம்பி சண்டை, கட்சி என்னை புறக்கணிக்கின்றது - மு.க.அழகிரி ஓப்பன் டாக்.

திமுகவில் வலுக்கிறது அண்ணன் தம்பி சண்டை, கட்சி என்னை புறக்கணிக்கின்றது - மு.க.அழகிரி ஓப்பன் டாக்.


இன்று புதியதலைமுறை டிவிக்கு பேட்டி அளித்த திமுகவின் தென்மண்டல அமைப்பு செயலாளரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது அதிருப்தியை கடுமையாக வெளிக்காட்டினார்.

நேற்று மதுரை மாநகர திமுக அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டதை அடுத்து கடும் அதிருப்தியில் இருந்த மு.க.அழகிரி இன்று புதியதலைமுறை பேட்டியில் கட்சியை கடுமையாக விமர்சித்தார், தனக்கு உரிய மரியாதை கட்சியில் தரப்படவில்லை என்றும் ஒதுக்கப்படுகிறேன் என்றும் கூறினார்,

மு.க.ஸ்டாலினுடன் அதிகமாக பேசிக்கொள்வதில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதியுடன் தலைவர் உறவு தான் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக கட்சியே 2011க்கு பிறகு இருக்காது என்று சொன்னதற்காக தன்னை இந்த அரசு மிகவும் நசுக்குகிறது என்றும் அதை கட்சி தட்டிகேட்காமல் உள்ளது என்றும் அதிருப்தி தெரிவித்தார். தன்னுடைய கல்லூரிக்கு அனுமதி இல்லை, தன் மீதும் குடும்பத்தின் மீதும்வழக்கு போடுகிறார்கள் ஆனால் கட்சி கண்டுகொள்வதில்லை என்றார். அழகிரி அதிமுகவில் இணையப்போகிறாரா என்று கேட்டதற்கு அது வதந்தி என்றார் ஆனாலும் அழகிரி அதிமுகவிலோ காங்கிரசிலோ விரைவில் ஐக்கியமாவார் என்று அரசியல் வட்டாரம் பரபரப்பாக உள்ளது.

ஆக மொத்தத்தில் கட்சி தலைமை மீதும் தம்பி ஸ்டாலின் மீதும் ஏகப்பட்ட எரிச்சலில் இருக்கிறார் அழகிரி.

ஒரு வாக்கெடுப்பு

# நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் அண்ணம் தம்பி சண்டை திமுகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதினால் லைக் போடுங்கள்.

# அழகிரிக்கெல்லாம் கட்சியில் செல்வாக்கில்லை, எனவே அவரால் திமுகவுக்கு பின்னடைவு இல்லை என்பவர்கள் கமெண்ட்டில் உங்கள் கருத்தை சொல்லுங்கள்...

இன்று இரவு 10.30க்கு மீண்டு இதே பேட்டி புதியதலைமுறை சேனலில் ஒளிபரப்பாகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media