BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 22 February 2014

ஜெயலலிதாவிற்கு செருப்பு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஏழு தமிழர்கள், 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து இருந்தது.

இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதி மக்களும், இந்த விடுதலை உத்தரவை பிறப்பித்த, ஜெயலலிதாவுக்கு எதிராக மிக மோசமாக பேசி, கீழ்த்தரமான‌ ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் நேற்று காங்கிரஸ்காரர்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா படத்திற்கு செருப்பு மாலையும், ராஜீவ் காந்திக்கு மலர் மாலையும் அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஜெயலலிதாவை இந்தியில் மோசமான வார்த்தைகளால் திட்டி கோஷங்கள் எழுப்பினர். ஒரு மாநிலத்தின் முதல்வரை, அவதூறாக பேசியும், செருப்பு மாலை அணிவித்தும் நடந்த ஆர்ப்பாட்டம், மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் அலுவலகத்திலேயே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media