பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இஜாஸ் கான் என்பவரும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த டீனா சர்மா என்ற பெண்ணும் பங்கேற்றனர். "ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாதி ரீதியாக செயல்படுகிறாரா?" என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இருவரும், கடுமையான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, ஒரு கட்டத்தில் டீனா சர்மாவை, இஜாஸ் கான் தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால், கோபம் அடைந்த டீனா சர்மா, இஜாஸ் கான் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பதிலுக்கு டீனா சர்மாவை, இஜாஸ் கான் தாக்க முயற்சித்தார், இதனால், அதிர்ச்சி அடைந்த, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், ஓடி வந்து, இருவரையும் பிரித்து விட்டனர்.
தொலைக்காட்சியில் இந்த காட்சிகள் நேரடியாக போய் கொண்டிருந்தது. இச்சம்பவத்தை அடுத்து ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.