BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 22 February 2014

சென்னை: டிசிஎஸ் பெண் ஊழியர் உடல் கண்டெடுப்பு

சென்னை சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அந்த பெண்ணின் பெயர், உமா மகேஸ்வரி, வயது 24, இவரது சொந்த ஊர் சேலம். கடந்த ஒரு வருடமாக, சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.  கடந்த ஒன்பது நாட்களாகவே காணாமல் போயிருந்தவர், சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் டிசிஎஸ் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி, மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டரா அல்லது எந்த காரணத்திற்காக‌ இந்த கொலை நிகழ்ந்தது என்பது பற்றி விசாரணைக் நடந்து வருகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media