BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 22 February 2014

ஏழு பேர் விடுதலைக்கு மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்ததற்கு, வருகிற லோக்சபா தேர்தலில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள், ஏழ்வரையும் விடுதலை செய்ய, ஜெ. எடுத்த முடிவு மிக சரியானது- ராம் ஜெத்மலானி


நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது, "ராஜிவ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேரையும், விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை சரியானது என்றும், மத்திய அரசில் உள்ள சில பேர் கூறுவது போல், எந்த விதிமுறைகளையும்  அவர் மீறவில்லை என்றும், சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், "ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து மரணத்தின் பிடியில், அதன் நிழலில் அவர்கள் சிக்கி தவித்தனர். இது 5 ஆயுள் தண்டனைக்கு சமமானது. இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைப்பேன்", என்றும் கூறினார்.

"ஏழு பேர் விடுதலைக்கு மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்து கூறியதற்கு, வருகிற லோக்சபா தேர்தலில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்." என்றும் ராம் ஜெத்மலானி தான் பேசுகையில் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media