BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 21 February 2014

தேசத்தை திரும்பி பார்க்க வைத்த திருமுருகன், அர்னாப் கோஸ்வாமியிடம் கேட்ட கேள்விகள்


மே 17 இயக்கத்தின் தலைவரான திருமுருகன் காந்தி, நேற்று நடந்த டைம்ஸ் நவ் நிகழ்ச்சியில், விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் கேட்ட கேள்விகள், அர்னாப் கோஸ்வாமியை திண‌ற வைத்தது.

திருமுருகன் காந்தி அர்னாபிடம் கேட்ட சில கேள்விகளும், அதற்கு அர்னாப் பதில் சொல்ல முடியாமல் தினறி, மைக்கை அனணத்ததும்..

திருமுருகன் காந்தி: மிஸ்டர் அர்னாப், காங்கிரஸ் எம்பி ராஜீவ் கொலை வழக்கில் எதற்காக மொத்த தேசத்தையும் திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்... இந்தக் கொலையில் நேரடித் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஆனால் இப்போது சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சாமி, சந்திரா சாமியை ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை? ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட இந்த இரு குற்றவாளிகளையும் ஏன் காப்பாற்றப் பாடுபடுகிறீர்கள்? வர்மா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?

அர்னாப்: இதற்கெல்லாம் நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்..

திருமுருகன் காந்தி: ஆனால் நீங்கள் இந்த தேசத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள்

அர்னாப்: ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்... அல்லது உங்கள் மைக் பிடுங்கப்படும்.

திருமுருகன் காந்தி: என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யார்? இப்போது சிறையில் உள்ள ஏழு பேரும் அல்ல... இது விசாரணையில் தெரிந்துவிட்டது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் சந்திராசாமியும் சுப்பிரமணியசாமியும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்னாப்: கீப் கொயட்... பேசாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் மைக்கை செயலிழக்கச் செய்வேன்.

திருமுருகன் காந்தி: ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி நீங்கள் பேச மறுப்பதேன்? வர்மா கமிஷன் அறிக்கையைப் பற்றி வாயே திறக்கமாட்டேன் என பிடிவாதம் பிடிப்பது ஏன்?

அர்னாப்: மிஸ்டர் காந்தி, மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இப்போது பேச வேண்டாம். திருமுருகன் காந்தி: ஏன் நான் பேசாமலிருக்க வேண்டும்... என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அர்னாப்: உங்களோடு நான் விவாதிக்க விரும்பவில்லை. அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்குங்கள். இனி இந்த விவாதத்தில் உங்களோடு தொடர விரும்பவில்லை.

அர்னாப்பிடம் அதிரடியாக கேள்விகளை கேட்டு, ஒரே நாளில், தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தமிழன் திருமுருகன் உங்களை கவர்ந்து இருந்தால், இச்செய்திக்கு லைக் போடுங்கள், மற்றவருடன் பகிருங்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media