தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.
அம்மா உணவகங்களில், இரவு நேரங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் வகையில் 2 சப்பாத்தி, பருப்பு கடைசல் ஆகியவற்றை ரூ.3-க்கு வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதற்கான திட்டத்தை இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். எந்த ஏழையும் இரவில் பசியோடு படுக்கைக்குச் செல்ல வேண்டாம் என்ற நிலையை இதன் மூலம் அவர் உருவாக்கியுள்ளார்.
இன்று ஜெயலலிதா தொடங்கவிருக்கும் மற்ற திட்டங்கள்:
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.546.93 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம்
இன்றைய பசுமை மரம், நாளைய பசுமையான எதிர்காலம் என்ற கருத்துடன், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்.
அமைதி, வளர்ச்சி, வளமை ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-பகுதி 2; தமிழ்நாடு தொழில் கொள்கை 2014; தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை 2014; தமிழ்நாடு உயிரி தொழில்நுட்பக் கொள்கை 2014 ஆகியவற்றை வெளியிட்டு, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வாரியத்தின் இணையதளத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.
மேலும், ரூ.5 ஆயிரத்து 81 கோடி மதிப்பிலான 16 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. இந்த நிகழ்ச்சிகள், சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
அம்மா உணவகங்களில், இரவு நேரங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் வகையில் 2 சப்பாத்தி, பருப்பு கடைசல் ஆகியவற்றை ரூ.3-க்கு வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதற்கான திட்டத்தை இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். எந்த ஏழையும் இரவில் பசியோடு படுக்கைக்குச் செல்ல வேண்டாம் என்ற நிலையை இதன் மூலம் அவர் உருவாக்கியுள்ளார்.
இன்று ஜெயலலிதா தொடங்கவிருக்கும் மற்ற திட்டங்கள்:
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.546.93 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம்
இன்றைய பசுமை மரம், நாளைய பசுமையான எதிர்காலம் என்ற கருத்துடன், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்.
அமைதி, வளர்ச்சி, வளமை ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-பகுதி 2; தமிழ்நாடு தொழில் கொள்கை 2014; தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை 2014; தமிழ்நாடு உயிரி தொழில்நுட்பக் கொள்கை 2014 ஆகியவற்றை வெளியிட்டு, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வாரியத்தின் இணையதளத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.
மேலும், ரூ.5 ஆயிரத்து 81 கோடி மதிப்பிலான 16 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. இந்த நிகழ்ச்சிகள், சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.