கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி சென்னை நீலாங்கரை ஜெ-8 காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜின் துப்பாக்கி வெடித்ததில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தமீம் அன்சாரி என்ற 16 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து, நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார், தமீம் அன்சாரி. அப்பொழுது, ''நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் என்னை சுடப்போவதாக கூறித்தான் சுட்டார். ஆனால், கவனக்குறைவாக சுட்டார் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பேசிய மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த மார்க்ஸ், ''காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். காயமடைந்த சிறுவன் தமீம் அன்சாரிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்'' என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.