பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தேநீர் பிரச்சாரத்திற்கு பதிலடி விடும்படியாக, ‘ராகா' பால் விநியோகத்தைத் உத்தர பிரதேசத்தில் துவக்கியுள்ளது காங்கிரஸ். ராகா' என்பது காங்கிரஸின் பிரதம வேட்பாளரான ராகுல் காந்தி பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் போல் தெரிகிறது. உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோராக்பூர் பகுதியில் ராகுல் காந்தி படம் போட்ட பேப்பர் கப் மூலம் பால் வினியோகத்தை அக்கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.
இது பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், ‘மோடியின் ஒவ்வொரு திட்டத்திற்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். தற்போது கோல்கர் பகுதியில் துவக்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம், விரைவில் 50 லிட்டர் பால் வினியோகம் செய்து இந்த பிரச்சாரம் விரிவுபடுத்தப்படும். மேலும், டீ உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதேபோல் மோடி நாட்டு நலனுக்கு நல்லவர் அல்ல என்று வாக்காளர்களிடம் நாங்கள் அறிவுறுத்துகிறோம்' என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.