BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 26 February 2014

கோயில் உண்டியல்களில் பணத்தைப் போடுவதைவிட, நியாயமாக வருமான வரி செலுத்துங்கள், அதிக பலன் கிடைக்கும்


வருமான வரித்துறை அலுவலகம் சார்பில், இரண்டு நாள் தேசிய கலை விழா, சென்னையில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நேர்மையாக வரி செலுத்துபவர் என்ற பாராட்டை வருமான வரித்துறையிடமிருந்து பெற்று வருபவர்கள் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஆவர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியபோது, "கடவுளுக்கு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர், வரிகட்டும் போதும் மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர். அதற்கு முன் சில விஷயங்களை யோசிக்க வேண்டும். வரியினால், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால், வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்துவோரின் பங்கும் தெரியும் வரும்,'' என்று தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் சொல்வது 'சபாஷ்' என நீங்கள் நினைத்தால், லைக் போடுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media