BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 26 February 2014

கேலி செய்து, கையைப் பிடித்து இழுத்தபோது செருப்பால் அடித்த உமாவை நாங்கள் பழி தீர்த்தோம், கொலையாளிகள் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்

மேற்கு வங்கத்தை சேர்த்த கட்டிட தொழிலாளிகள், உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதாகி இருக்கின்றனர். கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தினமும் ரூ.500 கூலி கிடைக்கும். தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி ரோட்டில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்த் போது, அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்து, இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப்பிடித்து இழுத்தோம். இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம். உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13-ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார். போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச் சென்றோம். அவர் கூச்சல்போட்டு கத்தி கலாட்டா செய்தார். இதனால் அவரது வாயை பொத்திக்கொண்டும், கை, கால்களை அமுக்கி பிடித்துக்கொண்டும் அவரை பலாத்காரம் செய்தோம். இதனால்,  உமா மகேஸ்வரி மயக்கமானார்.

அடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு போவதா, அல்லது கொலை செய்வதா என்று யோசித்தபடி இருந்தோம். இதற்குள் உமா மகேஸ்வரி மயக்கம் தெளிந்து கூச்சல் போட்டார். எங்களது முகத்தில் எச்சில் துப்பினார். அவரை உயிரோடு விட்டால் எங்களை போலீசில் சிக்கவைத்துவிடுவார் என்று பயந்து, நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அடிவயிற்றில் குத்தினோம். அவரது உயிர் போகவில்லை. இதனால் கழுத்தை அறுத்தோம். பின்னர் உமா மகேஸ்வரியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு, தப்பிவிட்டோம்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த கொலையாளிகள், இவ்வாறு தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media