மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செவ்வாய்க் கிழமை நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். "குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கலவரம் நடந்து கொண்டிருந்தது. யார், யாரோ அப்பாவி மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போது, மோடி அவற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்? மோடியால் கலவரத்தை தடுக்க முடியவில்லை. கலவரத்தை தடுக்காத நரேந்திர மோடி செயல் திறனற்றவர் (impotent)" என்று அவர் கூறியது, பா.ஜ.க.வினரை கடும் கோபமடைய செய்துள்ளது.
"இத்தகைய விமர்சனத்தை நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருப்பவர் முன்வைத்துள்ளது வருந்தத்தக்கது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டியதும் கூட. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். இத்தகைய தரக்குறைவான வார்த்தையை சல்மான் குர்ஷித் பயன்படுத்தியிருப்பதை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அனுமதிப்பாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.