BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 10 February 2014

லாபம் அனைத்தையும் சம்பளமாக கொடுக்க முடியாது: ப.சிதம்பரம்


சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வங்கிகளில் பெறப்படும் சேவைகளை பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 78வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், லாபம் அனைத்தையும் பங்குகளுக்கான ஆதாயம் வழங்கவும், வங்கி ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தி வழங்கவும் பயன்படுத்த முடியாது. லாபத்தின் குறிப்பிட்ட தொகை, வங்கிகளுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தேவைப்படும் மூலதனத்தை அதிகரிப்பதற்கும், வங்கிகளை நடத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media