BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 10 February 2014

மோடி அலை என்பது ஒரு மாயை. அது ஒரு கற்பனை- தொல். திருமாவளவன்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஊடகத்திற்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், "மோடி அலை என்பது ஒரு மாயை. அது ஒரு கற்பனை. அது தமிழகத்தில் எடுபடாது." என்றும்,  "பா.ஜ.க-வுடன் கூட்டணி சேரும் கட்சிகள் பெரும்பாலும் முட்டுச்சந்தில் போய் முட்டும் கட்சிகளே. அவர்கள் இடது புறமும் வண்டியைத் திருப்ப முடியாது; வலது புறமும் திருப்ப முடியாது. அப்படியே வண்டியைத் திருப்பிக்கொண்டு பின்னாலும் செல்ல முடியாது. அந்தக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் பா.ஜ.க-வுடன் செல்கின்றன என்பதே உண்மை." என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை பற்றி கூறிய திருமாவளவன், அவர் பா.ஜ.க., பா.ம.க. போன்ற பிற்போக்குச் சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், ஊழலை ஒழிப்பதை விட, சாதி, மத வெறியை ஒழிப்பது மிக முக்கியம் என்றும் தெரிவித்தார். மேலும், தான் விஜயகாந்தை சந்தித்து பேசிய போது, சாதி மத சக்திகளோடு அவர் சேர்ந்து விட கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும் அவர் அறிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media