கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் மிகப் பெரிய அளவில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் உள்ளிட்டவை நடந்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் காப்பாளருமான குருநாத் மெய்யப்பன், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையே என்று உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டி தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தவிர சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்தராவுக்கு உள்ள தொடர்பு குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனிவாசன், பிசிசிஐ தலைவராகவும், ஐபிஎல் அணி உரிமையாளராகவும் இரு பதவிகளையும் தக்க வைத்துக் கொள்வது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.