BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 24 February 2014

தலைமைச் செயலகம் முன் விவசாயி தீக்குளிப்பு


அசாம் மாநிலத்தில் பட்டா வழங்கும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி இன்று தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட, 45 வயதான பிரணாப் போரோ என்ற விவசாயி, மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு நிலப்பட்டா வழங்க வலியுறுத்தி, திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு 100 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.  போரோவின் தற்கொலை செய்தியால், மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இதுபற்றி அசாம் முதலமைச்சர் தருண் கோகெய் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வனத்துறை இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் வாழும் அவர்கள் தங்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்பதை எப்படி செய்ய முடியும்? இதில் எந்த நியாயமும் இல்லை“ என்றார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media