சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக வேலை பார்த்து வந்த உமா மகேஸ்வரி கொலை வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்ட டிஜிபி ராமானுஜம் கூறியதாவது:
13.2.2014 அன்று இரவு 10 மணி அளவில் சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வேலை முடித்து புறப்பட்ட பெண், பின்னர் காணவில்லை. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் புதர்களின் நடுவில் அப்பெண்ணின் சடலம் காயங்களுடன் 22.2.2014 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து பயன்படக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள் 044-2250 2500, 044-2250 2510, 98410 59989 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். cbcyber@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.
குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையிலோ அல்லது அவர்களைப் பிடிக்க உதவும் வகையிலோ உபயோக மான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ளும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.