நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளை தேர்தல் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியை கண்காணிக்க 3 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திலும் மத்திய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 1-ம் தேதியில் இருந்து இதுவரை 4 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன என்றும், ஒரு நாளுக்கு குறைந்தது 500 புகார்கள் வருகின்றன என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.
வெளி மாவட்ட புகார்கள் வந்தால் அந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்படுகிறது. இதுபோன்ற புகார்களைத் தொடர்ந்தும், வாகனச் சோதனையின்போதும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சுமார் ரூ.1 கோடி பிடிபட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.