BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 10 March 2014

நன்றிக்கடனுக்காக, சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம்: அகிலேஷ்


சமாஜ்வாதி கட்சி தலைவர் மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ், தன் மனைவி டிம்பிள், கன்னோஜ் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை என்பதனால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தற்போது சோனியா மற்றும் ராகுலை எதிர்த்து தங்கள் கட்சி சார்பாக எந்த‌ வேட்பாளரையும் நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒரு வேளை பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனால் மூன்றாவது அணி சார்பில் முலாயம் சிங்கை பிரதமராக்கும் வாய்ப்பு கிட்டும் என்று சமாஜ்வாதி கருதுவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media