BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 10 March 2014

கலைஞரிடம், எங்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என வாதாடி பார்த்தேன். போராடி பார்த்ததேன்-திரு.மா


திண்டிவனத்தில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க. கூட்டணியில் 6-ந்தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதிதான் என உடன்பாடு ஆனது.  கலைஞரிடம், எங்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என வாதாடி பார்த்தேன். போராடி பார்த்ததேன். அன்றைக்கு இயலாத நிலை இருந்தது. ஆனால், மறுநாள் கலைஞர் அறிவாலயத்திற்கு என்னை வரவழைத்து, நீங்கள் விரும்பியபடி 2 தொகுதிகள் வழங்கப்படுகிறது. ஒரு தொகுதி சிதம்பரம், மற்றொரு தொகுதி திருவள்ளூர் என்று சொன்னார்.

நான் விழுப்புரம் தொகுதியை கேட்டபோது, போன முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் தொகுதி கொடுத்தோம். ஆனால் நீங்கள் வெற்றிபெறவில்லை. 2 ஆயிரத்து 791 ஓட்டு வித்தியாசத்தில் தோற்று போனீர்கள். அதனால் இந்த முறை வேண்டாம் என்று சொன்னார்.

நமது உணர்வுகளை மதித்து, அன்போடு அழைத்து தொகுதி ஒதுக்கீடு தந்த கலைஞருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். 2 பாராளுமன்ற தொகுதி என்றால், 12 சட்டமன்ற தொகுதி. இந்த வலிமையை நாம் பெற்றிருக்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் பேசியிருந்தார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media