தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைக்க பல முயற்சிகள் எடுத்தும், அதற்கு பலன் இல்லாமல் போனதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை என்றாலும், காங்கிரஸ் தனித்தே மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "காங்கிரஸ் கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும். ஒருவேளை கூட்டணி எதுவும் அமையவில்லை என்றாலும், அனைத்து (40 இடங்கள்) தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவோம். கட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்" என்று கூறினார் ப.சிதம்பரம்.
எந்தெந்த சாதனைகளை கூறி ஒரு வேளை காங்கிரஸ் தமிழகத்தில் வாக்கு கேட்கலாம் என்று உங்கள் யூகங்களை, கமென்ட் செய்யுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.