அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம் கும்டாயில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் பிஜோய் கிருஷ்ண ஹேண்டிக்கை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
அப்போது, “பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் கொண்டது இந்தியா. நாட்டைப் பிரிக்கும் அரசியல் நடத்தும் பா.ஜனதா கட்சியால் நாட்டுக்கு வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஒரு நபரை அடிப்படையாக வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கான எந்த குறிப்பிட்ட கொள்கைகளும் அவர்களிடம் இல்லை என்று கூறிய பிரதமர், பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு முடித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.