சிவகாசியில் அ.தி.மு.க. சார்பாக மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்த நாடு பல்வேறு துறைகளில் சீரழிந்து போய்விட்டது. பொருளாதார துறையில் மட்டும் அல்ல பயங்கரவாதத்திலும் இந்த நாடு சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது. தமிழகத்தில் கல்வித்துறை, விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.
நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜீ, மாயாவதி, தேவகவுடா உட்பட அனைத்து தேசிய தலைவர்களும் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் பாரத பிரதமராக வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்திய நாட்டின் பாரத பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு. வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவைக்கும் கடமை, பொறுப்பு, ஒவ்வொறு தமிழனுக்கும், தமிழச்சிக்கும் இருக்கின்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.