BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 29 March 2014

மக்களுக்கு இனவாத விஷம் தேவையில்லை, வாய்ப்புகளே தேவை-நரேந்திர மோடி


ஹ‌ரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கோஹனா பகுதியில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் காங்கிரசின் வாக்குறுதிகளால் வெறுத்துவிட்டனர். நான் திட்டங்களை நிறைவேற்றும் நோக்குடன் வந்திருக்கிறேன். காங்கிரஸ் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ஆனால், முன்னேற்றம்தான் மக்களுக்குத் தேவை, பிரிவினை தேவையில்லை. மக்களுக்கு திறமைகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு தேவை. அவர்களுக்கு சூழ்ச்சிகள், அரசியல், இனவாத விஷம் தேவையில்லை. மக்களுக்கு வாய்ப்புகள் தேவை. சந்தர்ப்பவாதம் தேவையில்லை” என்று கூறினார். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media