கவ்ஹாத்தியில் இன்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்து அமையும் எந்தவொரு மதச்சார்பற்ற அரசுக்கும் இடதுசாரிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை ஆதரிக்காத ஜெயலலிதா, நிதிஷ் குமார் அல்லது நவீன் பட்நாயக் இவர்களில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க எங்களது கட்சி தயாராக உள்ளது. இருப்பினும் இந்த இரு கட்சிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொண்டிருக்கும் பட்சத்தில் அவருடனான கூட்டணியை புதுப்பிக்க நாங்கள் விரும்புகிறோம்.
கடந்த 2009ல் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போதைய நிலையில் கேரளாவில் எங்களது கட்சி நன்கு வலுப்பெற்றுள்ளது. திரிபுரா, மேற்கு வங்காளத்திலும் நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.