BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 29 March 2014

மோடியை கொன்று விடுவேன் எனக் கூறிய வேட்பாளர் கைது



"உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மோடி மாற்ற முயன்றால் நாங்கள் அவரை துண்டு துண்டாக்குவோம். இதற்காக நான் தாக்கப்படுவேன் என்றோ கொல்லப்படுவேன் என்றோ பயப்பட மாட்டேன். மோடிக்கு எதிராக நான் போரிடுவேன். உ.பி.யை அவர் குஜராத் என நினைக்கிறார். குஜராத்தில் 4 சதவீதம் பேரே முஸ்லிம்கள். ஆனால் உ.பி.யில் 42 சதவீதம் பேர் முஸ்லிம்கள்" என்று உத்தர பிரதேச சஹரன்பூர் தொகுதி வேட்பாளர் இம்ரான் மசூத் பேசியிருந்தார்.

"நான் மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார அனலில் அவ்வாறு பேசிவிட்டேன்” என்று மசூத் கூறி தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

சஹரான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடிக்கு எதிராக மசூத் இவ்வாறு பேசும் வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து மசூத் மீது சஹரான்பூர் மாவட்டம், தேவ்பாத் காவல் நிலைத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மசூத் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை சஹரான்பூரில் கைது செய்யப்பட்டார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media