மு.க.அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய்பிரபாகர் தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுவே தொண்டர்களின் கோரிக்கையாக இருந்தது. இதுவரை 40 தொகுதிகளுக்கு 1200 பேர் விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி எம்.பி.யை ஆரூண் எம்.பி. சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு மு.க.அழகிரி ஆதரவாக இருக்கிறார். அவரது ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறும்.
மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் இந்த முறை போட்டியிட வில்லை என்ற தகவல் தவறானது. அவர்கள் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதால் இளைஞர்களுக்கு வழிவிட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுவே தொண்டர்களின் கோரிக்கையாக இருந்தது. இதுவரை 40 தொகுதிகளுக்கு 1200 பேர் விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி எம்.பி.யை ஆரூண் எம்.பி. சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு மு.க.அழகிரி ஆதரவாக இருக்கிறார். அவரது ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறும்.
மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் இந்த முறை போட்டியிட வில்லை என்ற தகவல் தவறானது. அவர்கள் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதால் இளைஞர்களுக்கு வழிவிட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.