இன்று பெங்களூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், நரேந்திர மோடியை எதிர்த்து வாரனாசி தொகுதியில் தேர்தலில் போட்டியிட விருப்பம் என்றும், நாட்டில் மோடி அலை வீசவில்லை என்றும், ஆம் ஆத்மி அலையே வீசுகிறது என்றும் கூறினார். இம்மாதம் 23ம் தேதி, இன்னொரு பொதுக்கூட்டம் நடத்தி விட்டு, மக்களின் ஆதரவு அளவை தெரிந்து கொண்டு, தேர்தலில் போட்டியிடுவது பற்றி இறுதியாக முடிவு செய்வதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்து விட்டது என ஊடகங்கள் கூறுவதில் உண்மையே இல்லை என்றும், அம்மாநிலத்தை நேரில் சென்று தான் கண்ட போது அதிர்ச்சி அடைந்ததாகவும் கெஜ்ரிவால் கூறினார். மோடி ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில், 60,000 சிறுதொழில் நிர்வாகங்கள் மூடப்பட்டிருக்கிறது என்றும், 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
முகேஷ் அம்பானியின் ஒரு பாக்கெட்டில் ராகுல் காந்தியும், மற்றொரு பாக்கெட்டில் மோடியும் இருப்பதாக கூறிய கெஜ்ரிவால், ஆங்கிலேயர்கள் 200 வருடங்கள் இந்தியாவில் கொள்ளை அடித்ததை விட, மன்மோகன் சிங், சோனியா மற்றும் ராகுல் தலைமையில் காங்கிரஸ் 10 வருடங்களில் கொள்ளை அடித்தது அதிகம் என்றும் குற்றஞ்சாட்டினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.