இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி தொகுதிகளில் நரேந்திர மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார். இன்று மாலை 3 மணிக்கு கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பேசி முடித்த பின்பு, தர்மபுரியில், சந்தைப்பேட்டை சாலையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.
பாரதிய ஜனதா கூட்டணியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்றாலும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் ஓட்டு கேட்பாரா என்று இன்று தெரியவரும்.
இந்த நிலையில் தர்மபுரியில் இன்று மாலை டாக்டர் ராமதாஸும் தனியாக பிரச்சாரம் செய்கிறார். தர்மபுரி தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தர்மபுரி பேருந்து நிலையத்தை அடுத்த டெலிபோன் நிலையம் அருகே நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகிறார். மேடையில் டாக்டர் ராமதாஸ் படம் மட்டும் வைக்கப்பட்டு உள்ளது மற்றும் கூட்டம் நடை பெறும் இடம் அருகே பா.ம.க. கட்சி கொடிகள் மட்டும் கட்டப்பட்டு உள்ளது, கூட்டணி கட்சிகளின் கொடிகள் எதுவும் கட்டப்படவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.